வியாழன், 13 மே, 2010

ஒரு ஞாயிற்றுக் கிழமையும்-சில நிகழ்வுகளும்....

வழக்கம் போலவே ஒரு விடுமுறை தினம். வழக்கத்திற்குமாரான சில நண்பர்களுடன் கோவையில் நடந்த கலாப்ரியாவுக்கான ஒரு பாராட்டு விழாவுக்கான பயணத்திட்டமிடல்...

விபரம் முன்னமே அறிந்திருந்தும் திரு.முரளியிடமிருந்து வந்த அழைப்பில் இணைந்து கொள்வதென முடிவு செய்துவிட்டேன்...

உடன்பணிபுரிந்தவர்களாக இருந்த நானும், திரு.ராமன்குட்டி அவர்களும் பதிவர்களாக(!!??) அறிமுகப்படுத்திக்கொண்டது இரட்டிப்பு மகிழ்ச்சி.....

நான்,முரளி,பிரதீப் மற்றும் ராமன் நால்வருமென இனிதே(???) துவங்கியது பயணம்.என்னதான் எக்கி எக்கி குதிச்சாலும் ஏரோப்பிளான தொட முடியாதுங்கிற மாதிரி..என்னோட ஒட்டவாயிலிருந்து ஒயாத வாதம் எனக்கே பிடிக்கவில்லை.

சத்தியமாகவே என்னையுமறியாமல்தான் நான் விவதாங்களை தொடங்கிவிடுகிறேன்.சமீப காலங்களில் முடிந்தளவு நான் இதை கட்டுப்படுத்தியே வருகிறேன்.

நாங்கள் சென்று சேரும்போது திரு.நாஞ்சில் அவர்கள் பேசி முடித்து திரு.மணிகண்டன் கலாப்பிரியா பற்றி தான் எழுதி வைத்திருந்த கட்டுரையை வாசிக்க ஆரம்பித்தார். விமர்ச்சனக் கட்டுரையென்பதா (அ) சில விமர்ச்சனங்களோடு கூடிய கட்டுரையென்பதா எனத்தெரியவில்லை.
ஆனாலும் கலாப்பிரியா பற்றிய அவருடைய சில விமர்ச்சனங்கள் பொருட்படுத்தத் தக்கவையாகவே எனக்குத்தோன்றியது.

நாஞ்சில் பேச்சைத் தவறவிட்டதில் சற்று வருத்தமே.புதுப்புது அர்த்தங்கள் பெறும் சில நல்ல வார்த்தைகளையும்,சில புள்ளிவிபரங்களையும் கேட்க முடியாமல் போய்விட்டது...

அ.வெண்ணிலா-அவரைப்பாதித்த நிகழ்வொன்றையும் அதை நினைவுபடுத்தும் கலாப்பிரியாவின் கவிதைகளைப்பற்றியும் குறிப்பிட்டார்.

திரு.சுகுமாரனுடைய பேச்சில் தெரிந்த ஆற்றாமை நியாயமானதே. பொதுவாக படைப்புத்துறையில் தீவிரமாக இயங்கி,சில,பல நல்ல பங்களிப்புக்களை செய்த முக்கியமான படைப்பாளிகள் காணமலோ(அ) தொலைந்தோ போவதும் பிறகு புதிதாக வந்த அப்போதைய முக்கிய படைப்பாளிகள் அவரைக் கண்டெடுப்பதும் தமிழ் சூழலுக்கொன்றும் புதிதல்லவே. ஒன்று தகுதியில்லாத படைப்புக்களை உயர தூக்கிப்பிடிப்பது (அ) முக்கிய படைப்புகளைக் கண்டுகொள்ளாமல் விடுவது எங்களுடைய பரம்பரைப் பழக்கம்.

மரபின்மைந்தன் முத்தையா சங்கப்பாடல்களைத் தொட்டு கலாப்பிரியாவைப் பேசினார்.

ஜெ.மோ இதை விமர்ச்சன கூட்டமாக்கமல் கலாப்பிரியாவுக்கான பாராட்டு விழாவாகவே கருதுவதாக கூறினார்.கவிதை மற்றும் கவித்துவம் இதற்கான ஒரு நுன் வேறுபாட்டை சில தருணங்களைக் கூறி விளக்கினார்.சுகுமாரனுக்கு ஒரு பதிலையும் வைத்தார்.ஆனால் அதிலேயே தொக்கி நின்ற ஒரு கேள்வி மட்டும் என் மனதில் ஊசலாடுகிறது.
சிறந்த படைப்பாளிகளை மற்றவர்கள் சிறப்பிக்க வேண்டுமென்பதிலலை நாமாகவே அதைச் செய்யலாம் திரு.நாஞ்சிலுக்கு,அசோகமித்திரனுக்கு தானே அறுபதாம் விழா எடுத்ததை பகிர்ந்து கொண்டார். ஆனால் சுகுமாரனை இவர் சற்று முன்னமே கவனத்தில் கொண்டிருந்தாரெனில் அவருடைய ஆற்றாமையைத் தவிர்த்திருக்கலாமெனவேயெனக்குத் தோன்றுகிறது. நிச்சயம் விஷ்னுபுரத்தின் அடுத்த இலக்கிய கூட்டம் சுகுமாரனுக்காக இருக்குமென எதிர்பார்ப்போமாக.


இறுதியாகப் பேசிய கலாப்பிரியா, அவர் கவிதையைப் போலவே அழகாய்ப்பேசினார். ஞாபக ஏடுகளைப் புரட்டி கவிதைக்கான கணங்களைப்பகிர்ந்துகொண்டார். ஒரு அனுபவத்தை,காட்சியைக் கவிதையில் படம்பிடிப்பது அவ்வளவு எளிதானதல்ல.அதுகாரணமாகவே கவிதை படைப்புக்கலையின் உச்சம் என சொல்லப்படுகிறது.

நிகழ்ச்சி முடிந்த பின் முண்டியடித்தில் எல்லா படைப்பாளிகளுடனும் (அ.வெண்ணிலாவைத்தவிர : வாய்ப்புக்கிடைக்கவில்லை) பேச முடிந்தது.முதல் முயற்சி சுகுமாரனிடம் பாதி தோல்வியில் முடிய அடுத்த வாய்ப்பு ணிகண்டனுடனும், ஜெ.மோவிடம், நாஞ்சிலுடனும், கலாப்பிரியா-வுடனும் மற்றும் மறுபடியும் சுகுமாரனுடனும் .

மணிகண்டனுடன் ஒரு அறிமுகமும், அவர் எதேச்சையாக இதே மேடையில் இதற்குமுன்பு நடந்த ஜெ.மோ. பங்கேற்ற நிகழ்ச்சியில் அவர் கேட்ட கேள்விகள் ஒரு முடிவுறா விவாதமாக வலைப்பதிவில் தொடர்ந்ததை அவருக்கு நினைவூட்டினேன்.

கலாப்பிரியாவின் ஏற்பாட்டில் நடந்த பதிவுகள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பளித்தற்காகவும்,அருமையான மதிய உணவு வழ்ங்கியதற்குமான நன்றியை இந்த நிகழ்ச்சியின் மூலமாக தெரிவிக்க முடிந்தது மிகுந்த உவகையையளித்தது.


ஜெ.மோ வுடன்,அங்காடித் தெரு வசனத்திற்க்கான பாராட்டையும்,ஊமைச்செந்நாய் பற்றியும்,பதிவுகள் கூட்டத்தைத் தொடர்ந்து அவரைச்சந்திக்கும் மூன்றாவது நிகழ்வு இதுவெனவும்,நான் தொடர்ந்து மூன்று முறை சந்திக்கும் எழுத்தாளர் அவர்தானெனவும்,அவருடைய அசோகவனம் நூலைப்பற்றியும்,அதன் முதல்பாகத்தை வெளியிட்டாலாவது அடுத்தபாகம் வெளிவரும்வரையில் அதைப் படித்துக்கொண்டிருப்போம் என நான் கூற அதன் முதல் பாகமே மூன்று புத்தகங்களாகும் என்று வியப்பில் ஆழ்த்தினார்.உங்களுடைய முழுவாழ்க்கையனுபவமும் அதில் மொத்தமாக இடம்பெறுமா? என்றதற்கு ஒரு அர்த்தம் விளங்கிக்கொள்ள முடியாத புன்னகையை மட்டுமே பதிலாக அளித்தார். அப்போது திடீரென்று வந்த வாசகர் ஒருவர் ஜெ.மோவின் காலில் விழ,அவர் பாதியில் தடுக்க இனி நமக்கென்ன வேலையென்றொதுங்கி நாஞ்சிலையடைந்தேன்.

அவருடைய வீட்டிற்கு ஏற்கனவே வந்ததைக் கூறி பேச்சைத்துவக்கினேன்.புதிய புத்தகங்கள் பற்றி கேட்டபோது நாலைந்து புத்தகங்கள் இந்த மாதக்கடைசியில் வருவதாகக் கூறினார்.அதிலொரு கவிதைப்புத்தகமும் அடக்கம்.14வருடங்களுக்குப்பிறகு இரண்டாவதாக வரும் கவிதைப்புத்தகமெனக்கூறினார்.நாஞ்சில் கம்பராமயணத்தில் ஆழ்ந்து,தோய்ந்திருக்கிறார்.சில சமயங்களில் ஒரு முழுப்பாடலையோ (அ) முக்கியவரியையோ ஜெ.மோ.அவர்களுக்கு குறுந்தகவலாக அனுப்புவதுண்டாம்.( இது அவரை வீட்டில் சந்தித்தபோது அவர் கூறியது).

இதுதான் சந்தர்ப்பமென நானும் இன்னொரு வாசகரும் நீங்கள் ஏன் கம்பராமயணத்தையும் உங்களுடைய அனுபவத்தையும்,ரசனையையும் இணைத்து ஜெ.மோ.வின் சங்கச்சித்திரங்கள் போல் எழுதக்கூடாது எனக்கேட்டோம். மிகுந்த மன மகிழ்ச்சியுடன் உங்களைப்போல இதுவரை எந்த வாசகரும் கேட்கவில்லை.இப்பத்தான நீங்க கேக்கறீங்க? பார்போம் எனச்சொன்னார்.

அடுத்ததாக மறுபடியும் நான் சுகுமாரனைத்தேடிப் போய் அவருடைய சில கவிதைகளையும், இரண்டு கட்டுரைத்தொகுப்புகளைப் பற்றி என் பேச்சைத்துவக்கினேன். ஒரு முழுத்தொகுப்பாக வாங்கியதில் என்னை ஏமாற்றாத இரண்டு கவிதைப் புத்தகங்களில் ஒன்று சு.ரா.வுடயதும் இன்னொன்று அவருடையததும்தான் எனச் சொன்னதற்கு சிரித்தார்.அவருடய சில கவிதைகளை சிலாகித்தை கவனுமுடன் கேட்டவர் என்னைப்பற்றி விசாரித்தார். அவர் திருவனந்தபுரத்தில் பனியாற்றிக்கொண்டிருந்த ஊடகம் பற்றியும் அவருடய குடும்பத்தையும் பற்றிக்கேட்டேன்.எனக்கு இன்று வரையில் அவருடய எழுத்து மிகுந்த நெருக்கமாகயிருக்கிறது என்றதற்கு புன்னகைத்தார்.மெல்ல மலையாளிகளைப்பற்றி பேச்சுத்துவங்கியதுபோது கல்யாண்ஜீ அங்கு வந்தார்.அவரும் சுகுமாரனும் கவிதைப்பற்றிய உரையாடலைத் துவக்கியபோது ஒரிரு வாங்க்கியங்களுடன், நானும்பங்கேற்றுக் கொண்டிருக்கையில் முத்தையா கிளம்பளாமா என இருவரையுமே அழைத்துச்சென்றார்.


இவ்வளவு நிகழ்வுக்கிடையில் திரு.அரங்கசாமி (நிகழ்ச்சியேற்ப்- பாட்டாளர்களில் ஒருவர்).தானாகவே என்னிடம் முன்வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு(திருப்பூர்காரென) கூடிய விரைவில் இங்கும் ஒரு நிகழ்ச்சி நடத்தயிருப்பதாகவும் ஆகவே தொடர்பிலேயே-யிருக்குமாறும் கேட்டுக்கொண்டது மிகுந்த மனநெகிழ்வைத் தந்தது....

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக சங்கத்தலைவர் (வெயிலான்) உரிமையோடு அழைத்துப் பேசியதும் பிறகு அவர்,திரு.வடகரைவேலன் மற்றும் நாங்கள் நால்வரும் ஒன்றாக உணவருந்தியதும் அந்த நாளை மேலும் அழகாகவும்,அர்த்தமுள்ளதாகவும் மாற்றியது.

இறுதியாக என் சொந்த கருத்து ஒன்று : எழுத்தாளர்கள் வயசுபொன்னங்க மாதிரி.அவ்வளவு சீக்கிரம் அவங்க நெருங்கவும் மாட்டாங்க..நம்மளையும் நெருங்க விடமாட்டாங்க...மனசுக்கு புடிச்ச பொன்னுனா எப்படி பசங்க துணிஞ்சு முன்னேருவாங்களோ அது மாதிரி நாமதான் எழுத்தாளர்களை அணுகனும்..நல்லதா இருந்தா ஆலிங்கனம்..இல்லைனா அனுபவம்..அவ்வளவுதான்.

2 கருத்துகள்:

cheena (சீனா) சொன்னது…

அன்பின் சிவா

எழுத்தாளர்களைச் சந்திப்பதென்றால் எனக்கு அலர்ஜி. எப்படிச் சந்திக்க வேண்டும் என்பதர்கு எடுத்துக்காட்டி இருக்கும் உவமை - ஆகா - வயசுப் பொண்ணூக ஆலிங்கனம் - இல்லன்னா அனுபவம். சரி சரி

நல்வாழ்த்துகள் சிவா
நட்புடன் சீனா

சு.சிவக்குமார். சொன்னது…

திரு.சீனாவிற்கு : அனேகமாக நன்றிகள் போதாது.ஒவ்வொரு பதிவையும் படித்து மிகுந்த நேர்த்தியுடன் பின்னூட்ட -மிட்டிருக்கறீர்கள்.

ஆனால் ஒன்று.எப்போதுமே படைப்பிற்கும்,படைப்பாளனுடைய பிம்பத்திற்கும் இடையில் மிகுந்த வேறுபாடு இருக்கிறது. இதில் ஏமாற்றமும் உண்டு. மகிழ்ச்சியும் உண்டு. நாஞ்சில் நாடனைச் சந்திக்காத எழுத்தாளர்களுக்கு சொர்க்கத்தில் இந்த ஒரு காரணத்திற்காக மறுக்கப்படவும் வாய்ப்புண்டு என்பது என் வரையிலான அபிப்ராயம்.