வானம் அன்றாடமாய்
மாலை நிகழ்வுகளின் குவியம்..
பறவைகளென
சிறகு கிளைத்த எழுத்துக்கள்
கூடிப் பிரியும் வெளியில்...
சமயங்களில் வார்த்தைகளாகவும்
சமயாசமயங்களில் வரிகளாகவும்...
கவிதை மனதில் கருக்கொள்ளும்
தருணம் நினைவில் அலைமோதும்.
உயரப் பறக்கும் புள்ளினங்களெல்லாம்
கருப்பாய் தெரிவது மாயமோ
மயக்கமோ....