சனி, 14 ஆகஸ்ட், 2010

முதல் அலைபேசியிலிருந்து.......





அரை நாழிகைக்கும் குறைவான
ஒரு ஒலி உயிர்பிக்கலாம்
ஒரு பிரியத்தை,காதலை,நட்பை...
ஒரு முழுப்பேச்சில் இழக்கவும்
நேரிடலாம் 
அதே பிரியத்தை,காதலை,நட்பை..
            
*

நீ..நானென்று முறைவைத்த
அழைப்புகளில் தளும்பிய நாட்கள் போய் 
இப்போது 
நீயா? நானா? என்று  நீள்கிறது வெறுமனே
சில்லறை விசயங்களில்
முரண்பட்டு

      *

இறந்துவிட்டதோ என துணுக்குறும்
நிமிடங்களில்... உயிர்ப்பின் உரத்த 
ஒலி சுமந்திருக்கும் உன் குறுச்செய்தியை..
                     
   *   

6 கருத்துகள்:

அன்பேசிவம் சொன்னது…

தலையும் வாலும் அருமை... வாழ்த்துகள் சிவா

சு.சிவக்குமார். சொன்னது…

நன்றி முர்ளீ.

திருநாவுக்கரசு பழனிசாமி சொன்னது…

//இறந்துவிட்டதோ என துணுக்குறும்
நிமிடங்களில்... உயிர்ப்பின் உரத்த
ஒலி சுமந்திருக்கும் உன் குறுச்செய்தியை//

கவிதை நல்லாயிருக்கு சிவா
தலைப்பு..?

சு.சிவக்குமார். சொன்னது…

நன்றி திரு.தலைப்புக் கொடுத்து கவிதை எழுதினா +விட -மைன்ஸ் ஜாஸ்தி..அதுவே தலைப்பு கொடுக்காமன்னா -விட + ஜாஸ்தி...ஹி..ஹி..அப்பாலிக்கா நேர்ல சொல்றேன்...

க.பாலாசி சொன்னது…

//நீயா? நானா? என்று நீள்கிறது வெறுமனே
சில்லறை விசயங்களில்
முரண்பட்டு//

அது என்னமோ சரிதானுங்க.. உணர்ரப்பதான் தெரியுது...

//இறந்துவிட்டதோ என துணுக்குறும்
நிமிடங்களில்... உயிர்ப்பின் உரத்த
ஒலி சுமந்திருக்கும் உன் குறுச்செய்தியை..//

அருமையா இருக்குங்க...

சு.சிவக்குமார். சொன்னது…

நன்றி பாலாசி...