செவ்வாய், 25 ஜனவரி, 2011

ஒரு மொக்கை....

சம்பவம் நடப்பதற்கு ஒருவாரம் முன்பு :

டேய் ஊரு வுட்டு ஊரு வந்த உனக்கே இவ்வளவு இருந்தா, இந்த ஊர்க்காரன் எனக்கு எவ்வளவு இருக்கும்.நீங்க வந்து அதை இதையும் பண்ணி பொன்னை ஏமாத்தி கூட்டிப்போய் கல்யாணம் பன்னீபீங்க..நாங் அப்படியே கையை ----------வச்சு வேடிக்கைப் பார்த்துட்டு இருப்போன்னு நினைச்சிட்டியா..நீ மட்டும் ஒரு அப்பனுக்கு,அம்மாவுக்குப் பொறந்திருந்தா கூட்டிப் போடா பார்க்கலாம்..

டேய் இவ்வளவு தூரம் வந்ததுக்கப்பறம் நான் இனி விடறதா இல்லை..உன்னோடத் தங்கச்சியா நான் கட்டறண்டா உன்னால ஆனதைப் பார்த்துக்கோ....

சம்பவத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு :

இந்த ஊர்ல தான் அண்ணன்,தங்கச்சியா பழகனாக் கூட தப்பா நினைக்றாங்கக்கா..சரஸ்வதியக்கா அம்மாகிட்ட  பாத்திரம் கழுவிகிட்டே சொல்லிட்டிருந்தாங்க.....

சம்பவத்தன்று :

காலையில் :

ஊரே பரபரப்பா இருந்துச்சு..சுரேஷ் அண்ணன் சொன்னது மாதிரியே சரஸ்வதியக்காவை கூட்டிட்டு ஒடிப்போயிட்டராம்...அந்தக்கவோட சொந்தக் காரங்கெல்லாம் ஆளுக்கொரு பக்கம் தேடிட்டுருக்கறாங்க....

முற்பகல் :

 ஒடுனவுங்களை புடுச்சுட்டாங்களாம்..திருமூர்த்தி மலைக்குத்தான் போயிருக்கறாங்க...சரஸ்வதியக்காவோட அண்ணனுக்கும் இடம் தேரிஞ்சு போச்சு..மொத்தமா அந்தக்காவோட ஊர்காறங்க எல்லோரும் வேன் எடுத்துட்டு அங்க போயிருக்கறாங்க....

பிற்பகல் :

சுரேஸ் அண்ணன் தாலி கட்டிடாராமா.. ஆனா சரஸ்வதியக்காவோட அண்ணன் அதை அத்து வீசிட்டு எல்லோரும் சேர்ந்து சுரேஸ்-ஐ போட்டு அடி பின்னி எடுத்துட்டாங்க...போலிஸ் ஸ்டேசன்ல வேற பொன்னை சுரேஸ் அண்ணனும் அவரோட பிரண்சும் சேர்ந்துதான் தூக்கிட்டுப் போயிட்டாங்க, அப்படீன்ன்னு கம்ளெய்ன் கொடுத்திட்டாங்க...

மாலை :

ரெண்டுப்பேரையும் போலிஸ் டேசனுக்கு கூட்டிட்டுப் போய்டாங்க..சுரேஸ் அண்ணனை மட்டும் டேசன்ல வெச்சுட்டு சரஸ்வதி அக்காவை அவங்க அண்ண்னோட அனுப்பிச்சுட்டுங்களாம்...

சம்பவத்திற்கு இரண்டு நாட்கள் கழித்து:

சுரேஷ் அண்ணன் குடியிருந்த வீட்டுமுன்னாடி வந்து நின்ன ஆட்டோவிலிருந்து அவரை இரண்டு பேரு கைத்தாங்கலா இறக்கி கூட்டிட்டிப் போனாங்க..முகம் பூராவும் அங்கங்க கருப்பு ,கருப்பா கந்திப் போய் மாம்பழத்துல வண்டு போட்ட ஒட்ட மாதிரி.

சம்பவத்திற்கு பிறகு மறுபடியும் இரண்டு நாள் கழித்து :

 ஆட்டோ சுரேஸ் அண்ணன் வீட்டு முன்னாடி வந்து நின்னுது.  அதிலிருந்து ஒரு ஏட்டையா எறங்கி, அண்ணனை வெளில வரச் சொன்னார். அண்ணன் வெறும் மேலோடயே வெளியே வந்தப்பதான் அவரோட உடம்புல வரி வரி சிவந்துகிடந்தது தெரிஞ்சது...

டேய்! போய் சட்டையை போட்டுட்டு வா...போலாம்..

எங்ககீங்க...

மாமியார் வீட்டுக்கு...

பொன்னையும் வரச்சொல்லுங்க...

டேய்...த்தா நான் என்னை மாமா வேலையா பார்க்கிறேன்..ஒழுங்கா டேசனுக்கு வந்து ஒரு கையெழுத்தைப் போட்டுட்டு வந்துரு...

ஏங்க என்னை மட்டும் கூட்டிட்டுப் போயி கையெழுத்து வாங்கிறீங்க.. பொன்னும்  ஆசைப்பட்டுதான் எங்கூட ஒடி வந்துச்சு..அதையும் வரச் சொல்லுங்க...

அதெல்லாம் எங்களுக்குத் தெரியும்..இப்ப நீயி ஒழுக்கமா ஆட்டோல வந்து ஏற்றய்ய...இல்ல அடிச்சி இழுத்துட்டுப் போகட்டுமா...

பக்கத்தில் இருப்பவர்களெல்லாம் தைரியப்படுத்த அண்ணன் பேசமா போய் ஆட்டோல ஏறிட்டார்....

அதே நாளின் மாலை :

ஆட்டோல சுரேஸ் அண்ணன் திரும்பி வந்தார். அடுத்த நாள் காலைல அவரை ஊருக்கு அனுப்பி வச்சுட்டாங்க..பொன்னையும் அவங்க சொந்தக்காரங்க கூட்டிட்டுப் போயிட்டாங்க.....

அதுக்கப்பறம் ஒரு வாரம் ஊர்ல எங்கத் திரும்புனாலும்  இதைப் பத்தியே பேசிட்டிருந்தாங்க...அப்புறம் அப்டியே வேர வேர பிரச்சனை வர இதை மறந்துட்டாங்க...

கொஞ்ச நாளைக்கப்பறம் சரஸ்வதியக்காவுக்கு கல்யாணம் அப்படீன்னு கேள்விப்பட்டேன்....

 இரண்டு வருசத்துக்கப்பறம் சுரேஸ் அண்ணனுக்கு வேறொரு பொன்னைப் பார்த்துக் கட்டி வச்சுட்டாங்க...அப்படீன்னும் சொன்னாங்க....

அதுக்கப்பறம் ஒருவருசம் கழிச்சு புருசனும் பொண்டாட்டியுமா சுரேஸ் அண்ணன் எங்க ஊருக்கு மறுபடியும் வந்தார்.அந்தக்காவும் நல்லத்தான் இருந்தாங்க..இருந்தாலும் சரஸ்வதியக்கா மாதிரி இல்லை....

சுரேஷ் அண்ணனும் பழைய மாதிரி இல்லை.முதல்ல இருந்ததைவிட  ரொம்ப இளைச்சுப்போயிருந்தார்.பழைய உற்சாகம்,சுறுசுறுப்பு இல்லை.ஒழுங்கா வேலைக்குப் போறதில்லை.மொத்தத்தில் ஒப்புக்கு வாழ்ந்துட்டிருக்கிறது மாதிரியிருந்தார்.

சரஸ்வதியக்காவோட வாழ்க்கையும் ஒன்னும் சரியில்லைன்னு..அவங்க புருசன வுட்டுட்டு வேற யார்கூடவோ இருக்கறதாவும் கேள்விப்பட்டேன்..

இவங்களைப் பிரிச்சுவச்சவங்க அதுக்கப்பறம் இதைப் பத்தியெல்லாம் கவலப்படாம அவங்க அவங்க வாழ்க்கையைப் பார்க்கப் போயிட்டாங்க...

ஆனா இந்த பிரச்சனைக்கப்பறமும் ஒடிப் போ(ற)னவங்க எண்னிக்கையும் மட்டும் குறையவில்லை...என்ன அவங்களோட பெத்தவங்க அப்புறம் சொந்தக்காரங்க அவங்களோட அணுகுமுறை மட்டும் ரொம்ப மாறிருச்சு...

அதுக்கான காரணங்கள் பின்வருமாறு....

1.ஒடிப்போனவங்கள தேடிக்கண்டுபிடிச்சுக் கூட்டிவந்து போலிசார் மூலியுமா பிரிக்கறதுக்கு ஆகுற செலவுகள் ( சிம்பிளா ஒரு கல்யாணத்தையே நடத்திரலாம்)

2.பொன்னோட குடும்பச்சூழல்,பையோனோட கூடுதல் விசயங்கள்

3. ஏற்கனவே நடந்த மாதிரி இவங்களைப் பிரிச்சு புதுவாழ்க்கையை அமைச்சுக்கொடுத்து அது நல்ல போகும்ங்கிறதுக்கு எந்த உத்திரவாதமும் இல்லை. இன்னொன்னு அவங்களாத் தேடிக்கிற வாழ்க்கைகிறதனாலா கணவன் மனைவிக்குள்ள இருக்கற அன்னியோன்யமும்,வாழ்ந்துகாட்டனும் அப்படீன்னு ஒரு வெறியும் கொஞ்சம் அதிகமாகவே இருக்குது.

4.சமயத்துல மானம் போயிடக்கூடாது அப்படீங்கறதுனால பெத்தவங்களே அரசல்,புரசலாக் கேள்விப்படற விசயத்தை வச்சு பிள்ளைகளுக்கு மொறையா கல்யாணத்தை பன்னிவச்சாறாங்க...

5.பெத்தவங்க வெறுத்துப் போயிடராங்க..அபூர்வமா சில பெத்தவங்க புரிஞ்சுக்கிறாங்க...

என்ன சொல்றது..

மகற் தந்தைக்கு ஆற்றும்நன்றி தானாகவே
 துணை தேடிக் கொளல்

கருத்துகள் இல்லை: