புதன், 1 செப்டம்பர், 2010

மொட்டை மாடியில் நின்று ரசித்த மாலைப் பொழுதுகள்......

வானம் அன்றாடமாய்

மாலை நிகழ்வுகளின் குவியம்..

பறவைகளென

சிறகு கிளைத்த எழுத்துக்கள்

கூடிப் பிரியும் வெளியில்...

சமயங்களில் வார்த்தைகளாகவும்

சமயாசமயங்களில் வரிகளாகவும்...

கவிதை மனதில் கருக்கொள்ளும்

தருணம் நினைவில் அலைமோதும்.

உயரப் பறக்கும் புள்ளினங்களெல்லாம்

கருப்பாய் தெரிவது மாயமோ

மயக்கமோ....

7 கருத்துகள்:

Unknown சொன்னது…

மயங்கும் மாலைப்பொழுது...
மயக்கும் கவிதை....

கலக்குங்க கவிஞரே....

சு.சிவக்குமார். சொன்னது…

திரு.வெண் புரவிக்கு நன்றி. வந்து, வாசித்து, பின்னூட்டியதற்கு.

சிங்கக்குட்டி சொன்னது…

ம்ம்ம்... கவிதை கலக்கல்.

சு.சிவக்குமார். சொன்னது…

நன்றி சிங்குட்டி வந்து, வாசித்து, பின்னூட்டியதற்கு.


தப்பா நினைச்சுக்காதிங்க..வெண்புரவி, சிங்ககுட்டி...ஒரே வன உயிரினங்களா இருக்கு...என்னோட பிளாக்கு அப்டியா..யா.. இருக்கு....

எஸ்.கே சொன்னது…

கவிதை மிக நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்!

சு.சிவக்குமார். சொன்னது…

நன்றி எஸ்.கே.

Unknown சொன்னது…

I COULD SEE SOME MATURITY IN YOUR POEMS ....ESPECIALLY LAST TWO LINES WHICH ENDS WITH A QUESTION OF INTERNAL SEARCH......