சனி, 3 ஜூலை, 2010

முதற்குறிப்பேட்டிலிருந்து...

விரிவின் எல்லைக்கே

சாத்தியப்படும் கவிதையின்

திறப்பு போல

தினமும் உன் இதழ்கள்

மொட்டவிழ்க்கும்

ஒரு புன்னகையை

எனக்கென்று



*********************************


வெள்ளியில் மினுங்கும் மேகம்..

நீலத்தில் நிறையும் வானம்...

அந்தியில் கவிழும் ஏகாந்தம் (அ) துக்கம்...

இரகசியத்தின் இரைச்சலில் துவங்கும் இரவு..

மின்மினிகளாய் இரைந்து கிடக்கும் பூமியின் பொய்கள்...

வயிற்றுப்பாட்டுக்காரனின் வட்டிலாய் நிலா...

சூரியப் பூவிதழ்கள் அவிழும் காலை....

ஒற்றைக் கண்ணில் எல்லாமும் படம் பிடித்து மூலையில்

முடங்கும்...

பிரதிகள் தாவும் நாற்புறமும் இறக்கைகள் இன்றி

இரண்டு கண்களில் வியந்து,

முகரும் பாதைவழி விரையும் நாயாய்

அன்றையத் தேவைகளை இருத்தி நகரத்துவங்கும் வாழ்வு..

நேர்கண்டு இரசிக்க இருக்கிறது மூப்பென

அவ்வப்போது எழும் ஆசைகளையும்

கரையொதுக்கி போகும் புத்திஜீவிதம்...

*************

கருத்துகள் இல்லை: