சனி, 29 மே, 2010

முதற்குறிப்பேட்டிலிருந்து....

அன்னார்ந்து பார்க்கையில்
மலைப்பாயிருக்கும்,
துவக்கத்தை போலல்லாமல் சீரற்று இருக்கும்,
கரடுமுரடாய் கால் கிழிக்கும்,மறைந்தும் கிடக்கும்
மூச்சுவாங்கும்,துவழும்
வியர்வை ஊற்றெடுக்கும்
சறுக்கலாம்,காரணிகள் மட்டுப்படுத்தலாம்
ஒதுங்க விழைந்தால் குழு பிரியும்

நீரோடைக்கருகில் நா வரண்டால்
கடவுள் பிழைப்பார்...
மூச்சுமுட்டிக்கொண்டோலா ஐயத்திற்கு
ஆட்படுவார்....

வழித்துணைகள் உண்டென்றாலும்
இறுதிவரையென்பது அறுதியில்லை...

முக்கிமுனகி தவழ்ந்து ஏகினால்..
சுற்றியுள்ளவைகளை சிறிதாக்கி
அழகாக்கும்...
குளிர்மேகம் முகத்திலறையும்....
முக்தி இதுவென்று மனம் துள்ளும்..
இன்னுமிருப்பவைகளை அறியாது...

--------------------------------------------------------

கடந்தகாலம் கல்வெட்டு...

சான்றென நீ...

-------------------------------------------------------

நிலவில் சப்தம்

உனக்கென் காதல்..

------------------------------------------------------------

கருத்துகள் இல்லை: