புதன், 28 ஏப்ரல், 2010

சில மின்னல்கள்...

கல்யாண வயசில் இருக்கும் ஒரு நவீன கால இளைஞன் தனக்கு வரப்போகும் மனைவி எப்படியெல்லாம் இருக்கனும் அப்படீன்னு கற்பனை செஞ்சு பாடற பாட்டு.....அப்படீன்னு டைரக்டர் சொன்னவுடனே..எழுதின பாடல்தான் இது...அனேகமா இதுதான் அவருடைய முதல் பாடல்னு நினைக்கிறேன்.....

பொதுவா சில எழுத்துக்கள்,வார்த்தைகள் ஒரு டியூனுக்குள்ள உக்காராது..அந்த மாதிரி சமயத்துல பாடலாசிரியரும்,இசையமைப்பாளரும் சேர்ந்து அந்த பாடல்ல அந்த யெழுத்தையோ, வார்த்தையையோ    திருத்தி- யமைப்பார்கள்..அப்படித்தான் ஒரு புதுக்கவிதையோட வடிவத்துல இருந்த இந்த பாட்டை கொஞ்சம் டியூனுக்கு ஏத்தமாதிரி மாற்றியிருப்பதாக பாடல் ஆசிரியர் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்..

ரொம்ப கவித்துவம் இல்லைனாலும் முதல்த் தடவ கேட்டதிலிருந்து இன்னைக்கு வரைக்கும் என் மனசில இந்த பாட்டு ஒட்டிட்டுருக்கறதுக்கு ஒரே காரணம் இந்த பாட்டினுடைய எளிமையான வரிகளும் அதே சமயம் ரொம்ப அருமையான நடைமுறை அர்த்தங்களும்தான்..

ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி வந்திருந்தாலும்..இன்னைக்கும் இந்த பாட்டு புதுசாவே இருக்கு அப்படிங்கிறது என்னுடைய எண்ணம்.

 காஞ்சிப் பட்டு சேலைகட்டி
கால்கொலுசில் தாளம் தட்டும்
கன்னிப் பொண்ணே நின்னு கேளம்மா

என்மனைவி வந்தபின்னால் என்னவெல்லாம்
செய்வேனென்று சேர்த்து வைத்த ஆசை சொல்லவா...

சேலைதான் போயாச்சு..சுரிதாரும் போராச்சு....
நித்தம் ஒரு ஜீன்ஸ் போட்டு முட்டி தொடும் மிடியைப்போட்டு
கொஞ்சம் கொஞ்சம் லிப்ஸிடிக் போட்டு அவளை நான் ரசிப்பேன்..
மாசத்துல ரெண்டுதரம் பியூட்டி பார்லர் கூட்டி போயி
ராத்திரியில் நைட்டியைப் போல்தான் நானிருப்பேன்..

ஸ்கூட்டர் ஓட்டச் சொல்லுவேன் இடுப்பில் கையைப் போடுவேன்...
முன்னால் பார்த்து ஓட்டுனு பின்னால் மெல்ல கிள்ளுவேன்..
தூங்கிப்போனால் சம்மதம் தோசை நானே ஊத்துவேன்.
ஊருக்கேதும் போயிட்ட உள்ளுக்குள்ளே ஏங்குவேன்....

அவள் பெயர்தனை இனிஷியலாய் இடும்படி நான் செய்திடுவேன்..
அவள் முகம்தனை மனதுக்குள் வரும்படி வரம் கேட்ப்பேன்..

அவள் தாவனிபருவத்து ல்வ் லெட்டர் அனைத்தையும் இருவரும் படித்திடுவோம்....
எங்கள் முதுமை பருவத்து முத்தங்களைக் கூட இனித்திடும்படி செய்திடுவோம்....

வெங்காயத்தை வெட்டும்போதும் கண்ணீர் வரக் கூடாதம்மா...வெங்காயமே வேண்டாம் கண்ணே நான் அதை வெறுத்திடுவேன்...

அடடா உந்தன் மம்மிக்கும் ஹைடெக் நடயை பழக்கனும்...
தோழி போல பழகனும்...சுரிதார் போட்டும் பார்க்கனும்...
அழகா பொன்னு போகையில் அதை நான் ரசிச்சு பார்க்கையில்
காதை மெல்லத் திருகனும் ஆனால் என்னை ரசிக்கனும்..

.........................................................................................................................
.........................................................................................................................

ஒரு நாளைக்கு மூனென அவள் முறைவத்து தரும் சிகரெட்டினை குடுத்திடுவேன்..
என் சில்மிஷ கரங்களில் சிதறிடும் ஜாக்கெட் ஊக்கினைத் தைத்திடுவேன்...

கோபப்பட்டு திட்டிவிட்டு கொல்லப் பக்கம் பொயி நின்னு அக்கம் பக்கம் பார்த்துவிட்டு மெல்ல நானேதானழுவேன்...

இந்த பாட்டு இன்னும் புதுசாவே இருக்குனு மேல சொல்லியிருந்தேன்...

ஒரு வேளை பசங்க மனசும் அப்படிதான..சீக்கிரத்தில் எந்த ஒரு புது விஷயத்தையும் ஏத்துக்கமாட்டாங்க...கொஞ்ச கொஞ்சமாகத்தான்.. ஏத்துக்குவாங்க....அப்பறம் அவர்களுடைய எதிர்பார்ப்பும் அப்படித்தான்...ரொம்ப பெரிசா எதிர்பார்க்க மாட்டாங்க...

கொஞ்ச நாளைக்கு முன்னாடி விஜய் டிவில ஒரு நிகழ்ச்சி நடத்தினாங்க

அப்ப பொன்னுங்ககிட்ட கேட்கப்பட்ட கேள்வி : உங்க பாய்பிரண்டுகிட்ட..நீங்க எதிர்பார்க்கும் விஷயங்கள் என்னனென்ன?

1.பிளாட் - இரண்டு படுக்கையறைகள் கொண்டது.
2. நான்குச் சக்கர வாகனம்.
3.இருச்சக்கர வாகனம்
4. மொபைல் போன்...

அதே கேள்வி ஆண்களிடம் :

1. டீ சர்ட்
2. கிரீடிங் கார்டு
3. வாழ்த்து

விசயத்துக்கு வருவோம்....மேலேயிருக்கற அந்த பாட்டையெழுதியது கவிஞர் வாசன்....படம் : ரெட்டை ஜடை வயசு (அப்படீன்னு நினைக்கிறேன்). ஆனா பாடல் காட்சியில் நடித்தவர் நம்ம அஜீத்.
இசையமைப்பாளர் : தேவா...

இதே பாடலாசிரியரோட இன்னொரு பாடல்...

முதன் முதலில் பார்த்தேன்..காதல் வந்தது...
எனை மறந்து எந்தன் நிழல் போகுது.
என்னில் இங்கு நானேயில்லை...காதல் போல ஏதுமில்லை....
எங்கே யெந்தன் இதயம் வந்து சேர்ந்ததா.....

இதுவும் மிகச்சிறப்பான இசையமப்பைக் கொண்டது.படம் : ஆஹா..

சில  வரிகள் :

நந்தவனம் இதோ இங்கேதான் நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன்.

அந்த நொடி அன்பே உன்னால்தான் நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்...

நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய்...அடிக்கடி யென்னுடல் சிலிர்க்க வைத்தாய்....

ஹைரிஹரனுடைய ஹிட்ஸ் வாங்கினீங்கனா நிச்சயம் அதில் இந்த பாட்டு இருக்கும்

இன்னொரு பாட்டு : வானத்து தாரகையோ..யாரிவள் தேவதையோ....

படம் : பூந்தோட்டம்.

இதே மாதிரி நிறைய பாடல்களை இவரிடம் எதிர்பார்த்தேன்...ஆனால் துரதிஷ்டவசமாக இவர் மிக இளைய வயதிலேயே அதுவும் வளர்ந்து வரும் நிலையிலேயே மரணமடைந்துவிட்டார்...

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

ஊரைப் பற்றி

ஊருக்கு ஆறு அழகு....ஊர்வலத்தில் தேரழகு.....

எங்க ஊர்ல இந்த ரெண்டுமேயிருக்குது.....ஆனா ஆறு போனத் தடம் மட்டுமே இப்பயிருக்குது.....எப்பவாவது பெருமழை பொழிஞ்சுதுனா மட்டும்....தற்காலிகமா ஒரு சிற்றாறு ஓடும்.......

ஆனால் வருடம் தவறாமல் சித்திரை மாதத்தில் நிச்சயம் தேரோடும்...

தமிழ்நாட்டுல திருவாரூர் தேருக்கப்பறம் எங்க ஊர் தேருதாங்கறது செவி வழி வழக்கு....

எங்க ஊர் பற்றி ஒரு சிறு குறிப்பு...

ஊர் பேர் : அவினாசி...காசில வாசி (அப்படீன்னா பாதி) அவினாசிங்கறது எங்க ஊர் பெரிசுங்களோட சொலவடை...

இங்கு கோவில் கொண்டிருக்கும் லிங்கேஸ்வரர் ஆசியினால் வளமான ஊர் அப்படிங்கிறதுனால அவினாசி : அவன்(னுடைய)+ஆசி.ஏதோ நமக்குத் தெரிஞ்சது.. (...தமிழய்யா உங்க பேர காப்பத்திடேன்னு நினைக்கிறேன்...)

இங்கிருந்து கோவைக்கு 47கி.மீ....ஈரோட்டுக்கு 60கி.மீ...திருப்பூருக்கு 12கி.மீ....சக்திக்கு 35கி.மீ...கோபிக்கு 45கி.மீ.... ஊட்டிக்கு..90கி.மீ..(மேட்டுப்பாளையம் வழியாகத்தான் போகனும்)

நியூ திருப்பூர் மற்றும் எல்& டீ (L&T) சாலை: சென்னை-கொச்சின் வரும் வரையில் அதிக நெருக்கடிகளும்,சந்தடிகளும் இல்லாமல் இருந்த ஊர்.

ரொம்ப சின்ன ஊர்..ஆனா சுற்றுப்புறத்தில் அழகான கிராமங்களைக் கொண்ட ஊர்...பொதுவா திருப்பூர் மாதிரி முக்கியமான தொழில் நகரம் பக்கதிலிருக்கும்போது இந்த மாதிரியான சின்ன ஊர அதிகமா கண்டுக்க மாட்டங்க....அதனால எல்லா வசதிகளுக்கும் அந்த ஊரைச் சாந்திருக்க வேண்டியிருக்கும்.....

ஆனா அவினாசி அப்படியில்லை...தனி அரசு மருத்துவமனை,தபால் நிலையம்,தொலைபேசி நிலையம்,வட்டார போக்குவரத்து அலுவலகம் (RTO office...சரியா!!!...) 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளி...பொறியியல் கல்லூரி(தனியார்)... காய்கறி சந்தை...பேருந்து நிலையம்...கோவை,சேலம் போன்ற ஊர்களுக்கு 24மணிநேர பேருந்து சேவை....ஒரிரு பெரிய தொழில் நிறுவ-னங்கள்  ...தாசில்தார் அலுவலகம்..சார்பு நீதி  மன்றம்... நூலகம்.. பூங்கா.. 3 திரையரங்கங்கள்.....(கொஞ்சம் அதிகமோ..ச்ச..ச்சே..ஊர் பெருமைன்னா..சும்மாவா...)

கொங்கு நாட்டில் இருக்கும் பழம்பெரும் பெரிய கோவில்கள் இரண்டு. 

1. கோவைப் பேருர் பட்டீஸ்வரர் கோவில்

2. அவினாசி லிங்கேஸ்வரர் கோவில்....(எங்க ஊருதாங்க.)

இரண்டுமே சிவன் கோவில்கள்...முக்தி பற்றிய பேச்சு வருகையில் ( திருவண்ணாமலைப் பற்றி மனதால் நினைத்தாலே முக்தி) அவினாசி பற்றி கேள்விப்பட்டாலே முக்தி கிடைக்கும் என்று ஒரு புத்தகத்தில் படித்தாக நினைவு.(கொசுறா கெடைச்சாலும் இனிப்பா கெடைச்சா சும்மாவா!)

சுந்தரரால்( ஆழ்வாரா!!) பாடல் பெற்ற தலம். (முதலையிடமிருந்து சிறுவனை மீட்ட கதை...தெரியாதவங்களுக்கு இன்னொரு(பெரிய்..ய

பதிவில் சொல்றேன்...)

எங்க ஊர்ல மொத்தம் ரெண்டு தேர். சின்னதொன்னு,பெரிசொன்னு..

இந்த தேருக்கு பின்னாடி ஒரு பெரிய கதையிருக்கு அத இன்னொரு பதிவில் சொல்றேன்....அனேகமா சூத்ரதாரி(கோபாலகிருஷ்ணன்)  இதைப் பற்றி ஒரு கதை எழுதியிருக்கிறார்னு நினைக்கிறேன்..

வர்ற ஞாயிற்றுக் கிழமை (25/4/10) இந்த தேர் திருவிழா தொடங்குது...

பொதுவா முதல் நாள் வடம் பிடிக்கிற நிகழ்ச்சி..இது வழக்கமா இரவில் தான் தொடங்கும்(சுமார் 12 மணியிருந்து 1 மணிக்குள்ள தொடங்கும்) ஒரு குறிப்பிட்ட தூரம்வரையோ...இல்ல 2 மணிவரைக்குமோ இழுத்திட்டு நிறுத்திருவாங்க....இந்த ஒரு நாள் மட்டும்தான் மனித சக்திய அதிகமா பயன்படுத்துவாங்க...அடுத்த நாள் இயந்திரங்களை அதிகமா பயன்படுத்த ஆரம்பிச்சிருவாங்க...

தேரடி வீதியில் தேவதைகளுக்கும் நிச்சயம் பஞ்சமிருக்காது.. SO....எல்லோரும் கண்டிப்பா வாங்க...

வியாழன், 22 ஏப்ரல், 2010

நான் நேசிக்கும் எழுத்தாளர்கள்-1

ஏதாவது ஒரு இடத்தில் எனக்கென்று ஒரு வெளி கிடைக்கையில் நான் பகிர்ந்துகொள்ள விரும்பும் எழுத்தாளர்களில் முதல் இடத்தில் இருப்பவர் இவர்.என்னை தீவிர இலக்கியத்தின் பால் ஈர்த்தவரே இவர்தான்.இவரைப் பற்றியே இப்பதிவு.

 
சற்று வழுக்கையான முன்னந்தலை..பெரிய சோடா புட்டிக் கண்ணாடி      வழுக்கைக்கு சம்பந்தமில்லாமல் முகமுழுவதும் தாடி...வேஷ்டி சட்டை....இவற்றோடு ஒரு அழகான மனிதர் இருக்கமுடியுமானால் அவர் நிச்சயம் திரு.சுந்தரராமசாமியாக மட்டுமே இருக்க இயலும். அவரை அழகாக மாற்றும் விஷயங்கள் இரண்டு மட்டுமே..ஒன்று அவருடைய புன்னகை..இன்னொன்று அவருடைய உரையாடல்...

 

 
என் வாசிப்பு என்பது முதன்முதலில் மூன்றாம் வகுப்பில் ராணீ காமிக்ஸ் படிப்பதில் துவங்கியது.உயிர் குடிக்கும் எரிமலைதான் நான் முதன்முதலில் படித்த புத்தகம்.குறைந்தது 10முறையாவது படித்திருப்பேன். அதிலுருந்து-தான் மாயாவி,கார்த்,இரும்புக்கை மாயாவி, பிளாஸ்கார்டன், மான்ட்ரேக் எல்லாம் என் உலகத்தை அளவுக்கு அதிகமாக ஆக்கிரமிக்க ஆரம்பித்-தார்கள்.ஒரு  கட்டத்தில் இவை என் வாசிப்பிற்கு போதுமானவையாக  இல்லை.எனவே என் முதல் புத்தகத் தேடல் ஆரம்பமாகியது..

 
அதன் பிறகு...லயன் காமிக்ஸ்,முத்து காமிக்ஸ்,பொன்னி காமிக்ஸ்,அம்புலி மாமா,பாலமித்ரா,க்ரைம் நாவல்,துப்பறியும் சாம்பு முதலான நூலகப்புத்த-கங்கள்,சரித்தர புத்தகங்கள்....என இவ்வாறு தேடித் தேடி படிக்க ஆரம்பித்-தேன்.

 
சாண்டில்யன், விக்கிரமன், அரு.ராமனாதன் எனவும், வைரமுத்து, மேத்தா, தமிழ்ழன்பன், கவிக்கோ, சிற்பி, தபூசங்கர், பா.விஜய், பழனிபாரதி, காப்மேயர், உதயமூர்த்தி, கனேசன்,லேனாதமிழ்வானன் என அத்தனையும் கடந்து
 வந்து...பதினொன்றாம் வகுப்பிற்கு பிறகே...சீரீய இலக்கியங்கள் படிக்க ஆரம்பித்தேன்..

 
ஆனால் அப்போது அதுதான் சீரிய இலக்கியங்கள் என்று தெரியாது.ஏன் அப்படியொன்று இருக்கிறதே தெரியாது.அதன் பிறகு என் கல்லுரியின் முதலாமாண்டில் முதல் நாள் வகுப்பில் (தமிழ் பாடம்) தான் திரு.கா.சுப்ரமணியம் என்பவரின் மூலமாகத்தான் எனக்கு சீரிய இலக்கியங்கள் அறிமுகமாகத்தொடங்கியது.இதற்கிடையிலேயே நான் தலைகீழ் விகிதங்கள்(நாஞ்சில் நாடான்),ஒன்பது ருபாய் நோட்டு(தங்கர் பச்சான்),உயிர்த்திருத்தல்(யூமா வாசுகி)..படிந்திருந்தேன்...

 

 
நான் ஜே.ஜே.சில குறிப்புகள் புத்தகம் படித்து முடித்தது என் கல்லூரியின் முதலாமாண்டில்.எந்த நல்ல புத்தகமும் கிடைக்காமல் வேறு வழியின்றி ஒரு வாழ்க்கை வரலாறு புத்தகம் என நினைத்து அதை நூலகத்திலிருந்து எடுத்து வந்திருந்தேன்.

 
ஆனால் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கிய பிறகுதான் பிரச்சனை ஆரம்பித்தது.என்னால் புத்தகத்தை பாதியில் கீழே வைக்கவும் முடிய-வில்லை.தொடர்ந்து படிக்கவும் முடியவில்லை..பாதியில் வைக்க முடியா-தற்கு காரணம்...அதனுடைய நடை.. உள்ளடக்கம்.. கதையமைப்பு.. உவமை-கள்....தொடர்ந்து படிக்க முடியாதற்கு காரணம்.....அதனுடைய கிண்டல் தன்மை மற்றும் கவித்துவ வர்ணனைகளை புரிந்து கொள்வதற்கான் நேரம்....

 
என்னை முதன்முதலில் தலைகீழாக புரட்டிப்போட்டப் புத்தகம். இத்தனைக்கும் இந்த புத்தகம் வெளிவந்தது 1981-82.நான் இந்த புத்தகத்தை வாசித்தது 2000. அப்படியிருந்தும் இந்த புத்தகத்தின் கதையோ..விவரிப்பு முறையோ...புத்தம் புதிதாகவேயிருந்தது.அந்த புத்தகத்தை படித்த அடுத்த நாள் நான் கல்லூரிக்குச்சென்றதும் முதலில் தேடிப்போனது..எனது தமிழாசிரியரையே...அவரிடம் நான் கேட்ட முதல் கேள்வி..இந்த ஜே.ஜே? அவரைப் பற்றிய வேறு தகவல்கள் வேறேங்கு கிடைக்கும்? ..அவர் சொன்-னார் அது வாழ்க்கை வரலாற்று குறிப்பல்ல..அது ஒரு நாவல்.. ஜே.ஜே. என்பது  கற்பனை கதாபாத்திரமென்று. என்னால் நம்பவே முடியவில்லை   மேலும் ஆசிரியர் கூறியது...தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த நாவல்களில் முக்கியமான நாவல் இதுவென்றும்..மேலும் ஒரு நாவல் என்றால் அது இவ்வாறுதான் இருக்க வேண்டுமென்றும்....

 
பிறகென்ன அந்த புத்தகத்தை பற்றிய தகவல்களைத் தேடித்தேடிப் படித்-தேன்...நிறைய விமர்ச்சனங்கள் இந்த புத்தகத்தைப் பற்றி வந்திருந்தது.    ஒரே ஒரு முக்கியமான சுவையான தகவலை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்ளளாம் என்று நினைக்கிறேன்.

 
இந்த புத்தகத்தை படித்துவிட்டு சுமார் 30பக்கங்களுக்கதிகமாக ஒரு கடி-தத்தை ஒரு பிரபல எழுத்தாளர் திரு.சுரா அவர்களுக்கு எழுதி அனுப்பி-யுள்ளார்.அவரை நேரில் வந்து சந்திக்குமாறு திரு.சுரா கூறியுள்ளார். அவரும் நேரில் சென்று சந்தித்திருக்கிறார்.தனது விமர்ச்சனத்தையும் முன் வைத்திருக்கிறார்.அதன் பிறகு தொடர்ந்த உரையாடல்களில் இருவருக்-கிடையில் நட்பு மலர்ந்து அது பல ஆண்டுகள் நீடித்திருக்கிறது.

 
மேலும் இவருடய ஆளுமையென்பது மொழிபெயர்ப்பில் தொடங்கி கவிதை,சிறுகதை,நாவல்,விமர்ச்சனம்,சிறுபத்திக்கை மற்றும் பத்தியெழுத்து என எல்லாவற்றிலும் மிக முக்கிய பங்காற்றியிருக்கிறார். மேலும் ‘காகங்கள்’ என்ற பெயரில் இவருடைய மாடியில் எழுத்தாளர் கூட்டங்கள் நடத்தியுள்ளார்.முக்கியமாக இவர் தவிர்க்கயியலாத கூர்ந்து கவனிக்கப் படவேண்டிய ஒரு சிந்தனை அமைப்பாக செயல்பட்டுள்ளார் என்றால் அது மிகையில்லை.

 
அதே போலவே மிகுந்த விமர்ச்சனத்திற்கும் ஆளாகியிருக்கிறார்.ஆனால் என்னைப் பொறுத்தவரை இவரைப் பற்றி சரியான,மிக முக்கியமான, நடு-நிலையான  விமர்சனம் என்பது இதுவரை பதிவு  செய்யப்படவில்லை-யென்றே நினைக்கிறேன்.திரு.நாஞ்சில் நாடன் அவர்கள் ஒரளவு பதிவு செய்திருக்கிறார்.ஆனால் எனக்குத்தெரிந்து திரு.எம்.எஸ் ஆல் மட்டுமே அதை சரியாக முழுமையாக செய்ய இயலும் என்பது என் எண்ணம்.
 
                                                     :
 
திரு.சுந்தரராமசாமி


பிறப்பு: 1931. நாகர்கோவில்.

 

இறப்பு: 14-10-2005, அமெரிக்கா.

 





நாவல்கள் :

 
1.ஒரு புளியமரத்தின் கதை(1966)

 
2.ஜே.ஜே.சில குறிப்புகள்(1981)

 
3.குழ்ந்தைகள் பெண்கள் ஆண்கள்(1998)

 
சிறுகதைகள்:

 
1.காகங்கள்(2000)

 
2.மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்(2004)

 
கவிதை :

 
எல்லா கவிதைகளையும் சேர்த்து “சுந்தரராமசாமி கவிதைகள்” என்ற ஒரே தொகுப்பாக வந்திருக்கிறது.

 
விமர்சனம் :

 
1. நா.பிச்சமூர்த்தியின் கலை : மரபும் மனித நேயமும்(1991)

 
2. காற்றில் கலந்த பேரோசை(1998)

 
3. விரிவும் ஆழ்மும் தேடி(1998)

 
மொழிபெயர்ப்பு :

 
1. செம்மீன் (1962)
தகழி சிவசங்கரப் பிள்ளை

2.தோட்டியின் மகன்.
தகழி சிவசங்கரப் பிள்ளை

 
3.தொலைவிலுருக்கும் கவிதைகள்.

 
நினைவுக் குறிப்புகள் :

 
1. ஜீவா (2003)

 
2. கிருஷ்ணன் நம்பி ( 2003 )

 
3. கா.நா.சு (2003)

 
4. சி.சு.செல்லப்பா.(2003)

 
பிற:

 
1. தமிழகத்தில் கல்வி

 
2. இவை என் உரைகள்

 
3. இதம் தந்த வரிகள் ( கு.அழகிரிசாமி-சு.ரா. கடிதங்கள்)

 
4. வாழ்க சந்தேகங்கள்

 
5. வானகமே..இளவெயிலே...மரச்செறிவே..

 
6. ஒரு தடா கைதிக்கு எழுதிய கடிதங்கள்.


விருதுகள் :

 
1.வாழ்நாள் சாதனையாளருக்கான இயல் விருது- கனடா பல்கலை கழகம்.

 
2. வாழ்நாள் இலக்கியப் பணிக்காக ‘கதா சூடாமணி விருது’.

மேலும் சில சுவையான தகவல்கள் :

  • 1988 ல் காலச்சுவடு என்ற  சிற்றிலக்கிய இதழை ஆரம்பித்தார். இந்த மாதிரி ஒரு இதழை ஆரம்பிக்கவேண்டும் என்பது இவருடய கனவு என்று கூட சொல்லலாம்.
  • தமிழின் மிக முக்கிய ஆளுமையான இவருடன் அன்றைக்கும் இன்றைக்கும் முக்கியமான எழுத்தாளர்கள் அனைவரும் இவருடன் தொடர்பிருந்தது.எனக்குத்தெரிந்தவர்கள் அழகிரிசாமி, .சு.செல்லப்பா, கா.நா.சு,வெங்கட் சாமிநாதன்,பிரமிள்,ராஜ நாரயணன்,நகுலன், நாஞ்சில் நாடன்,சுகுமாரன்,அரவிந்தன்,ஜி.நாகராஜன்,ஜானகி ராமன்,தொ.பரம சிவம்,அம்பை,யுவன் சந்திரசேகர்,  மௌனி, சி.மோகன், நீலபத்மநாபன், கிருஷ்ணன் நம்பி, கலாப்பிரியா, ஜெயகாந்தன்,   மனுஷ்யபுத்திரன், ராஜமார்த்தாண்டன், ஆற்றூர் ரவிவர்மா, ராஜ்சுந்தரராஜன், ராஜதுரை, பேராசிரியர் ஜேசுதாசன்,அ.முத்துலிங்கம்.
  • இவருடைய பிரசாதம் என்ற சிறுகதையை திரு.பாலுமகேந்திரா அவர்கள் “கதை நேரத்தில்” நாடகமாக்கியுள்ளார்.அதை அவரைத் தவிர மிகச்சிறப்பாக வேறு யாராலும் கையாண்டிருக்க முடியாது.
  • கோவை மத்திய சிறையில் இருந்த தடா கைதிக்கும் இவருக்குமிடையே சுமார் இரண்டாண்டுகளுக்கு மேலாக கடித போக்குவரத்து நடைபெற்று வந்துள்ளது.
  • இவர் கால்பந்தாட்ட ரசிகர்.
  • மரபுகள் மீது பெரிய பற்றுகள் இல்லாதவர்.கடவுள் நம்பிக்கையில்லாதவர்.
  • இவருடைய சவ அடக்கத்தின் போது கூட இவருடைய விருப்படி வழக்கமாக கடைபிடிக்கப்படும் எந்த மரபுகளும் கடைபிடிக்கப்பட-வில்லை.
இன்னும் சொல்வதற்கு நிறைய இருக்கிறது.பதிவின் நீளம்(!!!) கருதி இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.


இன்னும் சில இங்கு : http://azhiyasudargal.blogspot.com/

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

என்வரையில்...

வாழ்வின் ஏதாவது ஒரு அற்புத கனத்தையோ அல்லது அர்த்தத்தையோ படம்பிடித்து காட்டுவதே என்னைப் பொறுத்தவரையில் ஒரு நல்ல கலைப்படைப்பாகும்.வாழ்க்கையைப் பற்றிய நம் பார்வையை ஏதாவது ஒரு வகையில் மாற்றி அமைக்கவேண்டும்.நம்மை நிலை குலைய வைக்கவேண்டும்.

எவரொருவரையும் மோசமானவராக சித்தரிக்காமல் அந்த சுழ்நிலை சார்ந்து அவருடைய செயல்பாடு அவ்வாறு அமைந்துவிட்டதாக நம்மை என்னச்செய்வதே ஒரு நல்ல கலை வெளிப்பாடாகயிருக்கும்.

இதுவரையில் எவற்றையெல்லாம் மிகச்சிறந்த இலக்கியமென்று நாம் சுட்டிக் காட்டுகிறோமோ அவற்றிலெல்லாம் இதுவே திரும்பத் திரும்ப பெறப்படுகிறது.இதை கலைப்படைப்பில் மட்டுமில்லாமல் ஆன்மீகத்திலும் உணரலாம். சூழ்நிலைகளுக்கேற்ப நம்மை வடிவமைத்து கொள்ள வேண்டுமேயன்றி சூழ்நிலையை நமக்கேற்றார்போல் வடிவமைத்துக் கொள்ள இயலாது.

மேற் கூறிய இந்த கருத்துகளின் அடிப்படையிலேயே  நான் ஒரு கலைப் கலைப்படைப்பை  அணுகுகிறேன்,மதிப்பிடுகிறேன்.

நோக்கம்

சிறு வயது முதலே என்னையுமறியாமல் என்னுள் தொற்றிக் கொண்ட வாசிப்பு பழக்கம், மெல்ல மெல்ல வளர்ந்து, எங்கு சென்று சேர வேண்டுமோ அங்கு கொண்டு வந்து என்னைச் சேர்த்திருப்பதாக நினைக்கிறேன். இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த வாசிப்பு பழக்கம் என் பார்வையும் மூளையும் நன்றாக இயங்கும்வரையில் தொடர வேண்டுமாய் எல்லாம் வல்ல இறைவணை வேண்டிக்கொள்கிறேன்.


வாசிப்பு நமக்கு ஒரு புதிய வாசலைத் திறந்து வைக்கிறது.வாழ்க்கையைப் பற்றிய நம் பார்வையைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டேயிருக்கிறது.
இந்த வாசிப்பு பழக்கம் என்னை வெறும் புத்தகப் புழுவாக மட்டும் மாற்றாமல் அதனோடு சார்ந்த அதற்க்கிணையான இசை,திரைப்படம் மற்றும் பயணம் ஆகியவற்றையும் நோக்கி என்னைத்  தள்ளியது, தள்ளிக்கொண்டிருக்கிறது.

இதைப் பற்றியெல்லாம் பகிர்வதற்கு,இதனோடு என்னுடன் பயணிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட வயது வரை என்னுடன் ஓரு தோழமையிருந்தது. ஆனால் வாழ்வின் நெருக்கடி எவரையும் விட்டு வைப்பதில்லை.எல்லோரயும் பின்னங்கால் பிடரியில் அடிக்கத்துரத்துகிறது.பரஸ்பர நல விசாரிப்புகளே அதிகமெனும்போது பகிர்தல் எங்கிருந்து சாத்தியமாகப்போகிறது. ஆனால் கடந்த நான்கைந்தாண்டுகளில் அதிகப் பிரபலமாயிருக்கும் இந்த வலைப்பதிவுலகம் பகிர்தலுக்கான இடமாக மட்டுமின்றி, ஒரே (அ) வெவ்வேறு அலைவரிசியிலிருக்கும் பலரையும் ஒன்றினைக்குமிடமாகவும் இருக்கிறது.

எனவே என்னுடைய பகிர்தலையும் அவற்றோடு இணைக்க விழைந்ததே இந்த வலைத்தளமுயற்சி.