வெள்ளி, 1 அக்டோபர், 2010

வரிக்கு வரி
அழுத்தம் திருத்தமாக
இரண்டு முறைகள்
சப்தமாக தன் கவிதையை வாசிப்பது
அவர் வழக்கம்..

நாட்களின் நகர்வில்
அவருடைய சப்தங்களே  

கவிதைகளாயின...
                ****
விசேச தினங்கள்

1)
தர நினைத்து
தரத் தயங்கி
தரயேலாமல்
நினைவாய் வைத்துக்கொள்ளும்
வாழ்த்து அட்டைகள்
வாங்குவதற்கு...

2)
வாழ்த்துக்கள் நுரைத்துப்
பொங்கும் விசேச தினங்களில்
என் விசேங்கள் நுரைப்பதோ
உன் வாழ்த்துகளில்