வெள்ளி, 21 மே, 2010

ஏய் டண்னக்கா! டண்னக்கா!

கீழ்வரும் பாடல்களைக் கேட்கும்போதிலெல்லாம் இவரைப் பற்றி என்னுடைய கோணத்தில சில தகவல்களை பகிர்ந்துகொள்ள வேண்டுமென நினைத்துக்கொள்வேன். இதுவரை இந்த பாடல்களைக் கூறி இவரைப் பற்றி யாரும் எழுதியதாக என் கவனத்திற்கு வரவில்லை...

இனி பாடல்களைப் பார்ப்போம்.....

’தடாகத்தில் மீன்ரெண்டு காமத்தில்

தடுமாறித் தாமரைப் பூ மீது விழுந்தனவோ

இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும்

மோகத்தில் படைத்திட்ட பாகம்தான் உன் கண்களோ

சந்தணக் கிண்ணத்தில் குங்குமச் சங்கமம் அரங்கேற

அதுதானே உன் கன்னம்...

மேகத்தை மணந்திட வானத்தில் சுயவரம் நடத்திடும்

வானவில் உன் வண்ணம்....

இடையின் பின்னழகில் இரண்டு குடத்தைக்

கொண்ட புதிய தம்புராவை மீட்டிச் சென்றாய்...’

மைதிலி என்னைக் காதலி என்னும் படத்தில் ஒரு பொன்மானே எனத் தொடங்கும் ஒரு அருமையான பாடல்.

**********************************************************************

வசந்தகாலங்கள் இசைந்து பாடுங்கள்

புது முகமான மலர்களே நீங்கள்

நதிகளில் ஆடி கவி பல பாடி அசைந்து அசைந்து ஆடுங்கள்...

கருவண்டு நடனம் தருகின்ற நளினம் இதயத்தில்

சலனம் அம்மம்மா....

உன் மைவிழிக்குளத்தினில் தவழ்வது மீனினமோ

கவி கண்டிட மனத்தினில் கமழ்வது தமிழ் மனமோ

செம்மாந்த மலர்கள் அண்ணாந்து பார்க்கும் உன்

காந்த விழிகள் புது ஏகாந்த ராகம் தெம்மாங்கில் பாட

ஏதோ ஏதோ குயில்கள்

மலையில் நெளியும் மேகக் குழல்கள்

தாகம் தீர்த்திடுமோ பூவில் மோத

பாதம் நோக நெஞ்சம் தாங்கிடுமோ

மாதுளை இதழாழ்  மாங்கனி நிறத்தால்

மாதவி எழிழால் அம்மம்மா....

சுருள் வாழையின் மென்மையை

மேனியில் கொண்டவளே இருள் காடென்னும்

கூந்தலை இடைவரக் கண்டவளே

நூல்தாங்கும் இடையாள் கால் பார்த்து நடக்க

நெளிகின்ற வடிவம் மத் தாளத்தைப் போலே

தேகத்தையாக்கி குழல்கத்தை ஜாலம்

இது ரயில் பயணங்களில் வரும் பாடல்.

******************************************************************

இது குழந்தை பாடும் தாலாட்டு

இது இரவு நேர பூபாள்ம்

இது மேற்கில் தோன்றும் உதயம்

இது நதியில்லாத ஓடம்...

உளமறிந்த பின்தானோ அவளை நான் நினைந்தது

உறவுறுவாள் எனதானோ மனதை நான் கொடுத்தது

உயிரிளந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது..

ஒரு தலையாய் காதலிலே எத்தனை நாள் வாழ்வது.

****************************************************************

கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்

கலையிழந்த மாடத்திலே முகாரி ராகம்

முந்தானை பார்த்து முன்னூறு கவிதை

எந்நாளும் எழுதும் கவிஞர்கள் கோடி

முன்னாடி அறியா பெண் மணதைக் கேட்டு

அன்புண்டு வாழும் காளையர் கோடி...

ஒரு தலை ராகம் எந்த வகையினைச் சாரும்

அவள் இறக்கத்தை தேடும் என் மனம் பாடும்.

********************************************

நினைவு வெள்ளம் பெருகிவர நெருப்பெனவே சுடுகிறது

பூத்தால் மலரும் உதிரும் நெஞ்சில் பூத்தால் உதிரவில்லை

நிலவும் தேய்ந்து வளரும் அவள் நினைவோ தேய்வதில்லை

படுக்கை விரித்துப்போட்டேன் அதில் முள்ளாய் அவளின் நினைவு..

மேற்ச்சொன்ன பாடல்கள் ”ஒரு தலைராகம்” என்ற படத்தில் இடம்பெற்றவை.

*************************************************************************

அமைதிக்குப் பெயர்தான் சாந்தி அந்த அலையினில் ஏதடி சாந்தி..

உன் பிரிவினில் ஏதடி சாந்தி உன் உறவினில்தானடி சாந்தி..

எனத்தொடங்கும் இப்பாடலின் எல்லா வரிகளும் சாந்தி என்றே முடியும் இப்பாடல் இடம் பெற்றத் திரைப்படம் “ இரயில் பயணங்களில்”.

*************************************************************************

உயிரே வா உறவே வா...அழிவதில்லைக் காதல்

அதுவே என் பாடல் அன்பே வந்துவிடுவா....


சிலர் வாசனைக்கு ஆயிரம் பூக்கள் சிலர் வாசலுக்கு ஆயிரம் கதவுகள்

சிலர் வாழும் வரை ஆயிரம் உறவுகள் நான் சாகும் வரை ஒருத்தியின் நினைவுகள்...

இது ”மோனிஷா என் மோனலிசா” என்ற படத்தில் இடம்பெற்ற பாடல்.






மேற்க்கண்ட பாடல்கள் யாவும் திரு.T.ராஜேந்திரர் படங்களில் அவரே இசையமைத்து,அவரே பாடல்கள் எழுதி, அவரே படமாக்கிய சிறந்த பாடல்கள் ஆகும்..

*******************************************************************
அதே போல ”வைகைகரைக் காற்றே நில்லு”  எனத் தொடங்கும் பாடலில்( படப்பெயர் தெரியவில்லை)

மாக்கோலம் போடுவதற்கு வரவில்லையே

அவள்கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே


காதலில் வாழ்ந்த கன்னி மனம் காவலில் வாடையில் கன்னிவிடும்..

மேலே சொன்ன வரிகளில் கோலம் என்ற ஒரே சொல் இடம்பெறும் இடத்தை பொறுத்து இரு பொருள் தருகிறது.இதே போலத்தான் கன்னி என்ற சொல்லும்.


இளையராஜா கோலச்சிக்கொண்டிருந்த காலகட்டத்தில் இந்த பாடல்களைக் கொண்டு வந்தே,T.R.அன்றைய கல்லூரி இளைஞர்களின் மனதினில் இடம் பிடித்தார்.

மேலும் யாருடைய பாணியையும் பின்பற்றாமல் தனக்கென்று ஒரு தனி வழியைக் கையாண்டு மிக வெற்றிகரமாகவே வளர்ந்து வந்தார்..

எந்த ஒரு பின்பலமுமின்றி முற்றிலும் தனக்கு அவவளவாக பரிச்சையமில்லாத துறையில் ஒருவருடைய கவனித்தக்க முன்னேற்றமானது சாதனையென்றே கருதத்தக்கதாகும்.

அவ்வாறாக இளையாராஜாவினுடைய காலகட்டத்திலேயே தன்னுடைய இசைக்கும் ஒரு முகவரியை பெற்றுக்கொண்டவர் இவர்.

இவரும் எங்கும் இதுவரைக்கும் முறைப்படி இசைக்கற்றுக்கொண்டதாக குறிப்பிட்டதேயில்லை...

இவரைப் பற்றி நான் அறிந்த சில தகவல்கள் :-

* திரைப்படத்துறையில் இவருடைய ரசிகர்கள் இவரை ”அஷ்டவதானி T.ராஜேந்திரர்” என்றே குறிப்பிடுகிறார்கள்.( அஷ்டம் = எட்டு என்று பொருள்படும்)

கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம்,இசை,பாடல்கள்,ஒளிப்பதிவு, எட்டாவது நடிப்பா,பாடகரா (அ) கலை இயக்குனர் பணியா என்று சரியாகத்தெரியவில்லை.

* மேலும் அந்த காலகட்டத்திலேயே மிகுந்த அளவில் “செட்” போட்டு படமெடுத்தவர். காட்சிகள் படமாக்கப்பட்டவுடனே அந்த ” செட்டை” அப்படியே மற்ற மொழிக்காரர்ளுக்கு விற்றுவிடுவார்.அந்த அளவிற்கு இவருடைய “செட்” பிரபலம். ஒருவகையில் இவர் சங்கருக்கு  முன்னோடி என்று கூட கூறலாம்.

* இவருடைய முதல் திரைப்படம் ‘ஒரு தலை ராகம்’( கிட்டத்தட்ட ஒரு வரும் ஒடிய திரைப்படமென்பது செவி வழிச் செய்தி.) இதிலுள்ள பாடல்கள் எல்லாமுமே ஆண் குரலாகவே இருக்கும். முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றிக்கும் பரவலான கவனத்திற்கும் உள்ளானவர்.

*தென்னிந்திய திரைப்படத்துறையில் தனி ஒருவர் கிட்டத்தட்ட எட்டுத் துறைகளைக் கைகயாள்பவர் இவர் மட்டுமே என்பது  என்வரையிலான கருத்து.

* இவர் 40 குரல்களில் பேசும் வல்லமுடையவர்.அதற்காக தங்கப்பதக்கமும் வாங்கியவர் என்பது இவருடையப் பேட்டியில் கூறிய செய்தியாகும்.சில குரல்களை பேசிக்காண்பித்தார்.

* மேல்நிலை வரலாற்று பாடத்தில் (MA HISTRY) சிறந்த மதிப்பெண்களுக்காக தங்கப் பதக்கம் வாங்கியவர்.

*இவருடைய காதல் மனைவியின் பெயர் உஷா. இவரை நீங்கள் ”இரயில் பயனங்களில்” என்ற படத்தில் நாயகியின் தோழியாக பார்திருக்க வாய்ப்புண்டு. “உயிருள்ளவரை உஷா என்று என் மனைவியைக் கைப்பிடித்தேன்.இன்று வரையிலும் அப்படியே வாழ்ந்துகொண்டிருக்கிறேன்” என்பது இவருடைய கருத்து. வெற்றிகரமான காதல் வாழ்க்கைப் பற்றிய கணக்கெடுப்பில் நிச்சயம் இவரை இணைத்துக்கொள்ளலாம்.

*சிறந்த மேடைப் பேச்சாளர்.உஷா என்ற வார நூலின் ஆசிரியர்.

*தனிக்கட்சி ஒன்றை நடத்தி வருகிறார்.

* பூங்காவனத தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவுமிருந்துள்ளார்.

* பொதுவாக பூங்காவனம் பகுதியில் இவருக்கு நல்ல செல்வாக்குண்டு என்பது செய்தித்தாள் செய்தி.

* ஒரு முறை மீன் பாடி வண்டியை காவல் நிலையத்தில் பிடித்து வைத்திருந்தற்காக இரண்டு மணிநேரம் காவல் நிலைய ஆனையரிடம் வாதாடி அதை அந்த ஏழைக்கு மீட்டுத்தந்தவர்.

* பொதுவாக நடிகர் சங்கச் செயல்பாடுகளிலோ (அ) திரைப்பட விழாக்களிலோ சில ஆண்டுகள் முன்புவரை அதிகம் பங்கேறகாதவர்.

*எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர்.

* முதல்படத்திலிருந்து இன்று வரை அதே தலைமுடியுடனும்,தாடியுடனும் இருப்பவர்.

இவருடைய தன்னம்பிக்கை,உழைப்பு மற்றும் வெளிப்டையானத்  தன்மை ஆகியவற்றின் காரணமாக இவர் மேல் எப்போதுமே எனக்கு ஒரு சஃப்ட் கார்னர் உண்டு.

3 கருத்துகள்:

Guruji சொன்னது…

plz call 9715553529

cheena (சீனா) சொன்னது…

அன்பின் சிவா

டீஆரின் மேல் சாஃப்ட் கார்னர் - வாழ்க - வளர்க - பல காரணங்கள் கூறலாம் - இதற்கு ஆதரவாகவும் - எதிராகவும்.

நல்வாழ்த்துகள் சிவா
நட்புடன் சீனா

சு.சிவக்குமார். சொன்னது…

ஆமாம்.இது போல நிறைய பேர். சில விஷயங்களைத் தாண்டிப் பார்க்கும்போது ...சிலரைத் தவிர்க்க முடிவதில்லை.

எனினும் இந்தப் பதிவையும் பொருட்ப்படுத்தி படித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி.