புதன், 1 செப்டம்பர், 2010

மொட்டை மாடியில் நின்று ரசித்த மாலைப் பொழுதுகள்......

வானம் அன்றாடமாய்

மாலை நிகழ்வுகளின் குவியம்..

பறவைகளென

சிறகு கிளைத்த எழுத்துக்கள்

கூடிப் பிரியும் வெளியில்...

சமயங்களில் வார்த்தைகளாகவும்

சமயாசமயங்களில் வரிகளாகவும்...

கவிதை மனதில் கருக்கொள்ளும்

தருணம் நினைவில் அலைமோதும்.

உயரப் பறக்கும் புள்ளினங்களெல்லாம்

கருப்பாய் தெரிவது மாயமோ

மயக்கமோ....